Thursday, 4 February 2016

ஶ்ரீலங்கா தேசிய கீதம்

சிங்கள மொழியில்தமிழ் ஒலிபெயர்ப்புதமிழ் மொழிபெயர்ப்பு
ශ්රී ලංකා මාතා
අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
සුන්දර සිරිබරිනී, සුරැඳි අති සෝබමාන ලංකා
ධාන්ය ධනය නෙක මල් පලතුරු පිරි ජය භුමිය රම්යා
අපහට සැප සිරි සෙත සදනා ජීවනයේ මාතා
පිළිගනු මැන අප භක්තී පූජා
නමෝ නමෝ මාතා
අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
ඔබ වේ අප විද්යා
ඔබ මය අප සත්යා
ඔබ වේ අප ශක්ති
අප හද තුළ භක්තී
ඔබ අප ආලෝකේ
අපගේ අනුප්රාණේ
ඔබ අප ජීවන වේ
අප මුක්තිය ඔබ වේ
නව ජීවන දෙමිනේ නිතින අප පුබුදු කරන් මාතා
ඥාන වීර්ය වඩවමින රැගෙන යනු මැන ජය භූමී කරා
එක මවකගෙ දරු කැල බැවිනා
යමු යමු වී නොපමා
ප්රේම වඩා සැම භේද දුරැර දා නමෝ නමෝ මාතා
අප ශ්රී... ලංකා, නමෝ නමෝ නමෝ නමෝ මාතා
ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சுன்தர சிரிபரினீ, சுரெதி அ(த்)தி யோபமான லங்(க்)கா
தான்ய தனய நெ(க்)க மல் பல(த்)துரு (ப்)பிரி ஜய பூமிய ரம்யா
அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா
நமோ நமோ மா(த்)தா
அப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
ஒப வே அ(ப்)ப வித்யா
ஒப மய அ(ப்)ப சத்யா
ஒப வே அ(ப்)ப சக்(த்)தி
அ(ப்)ப ஹத (த்)துழ பக்(த்)தீ
ஒப அ(ப்)ப ஆலோ(க்)கே
அ(ப்)பகே அனுப்ராணே
ஒப அ(ப்)ப ஜீவன வே
அ(ப்)ப முக்(த்)திய ஒப வே
நவ ஜீவன தெமினே நி(த்)தின அ(ப்)ப (ப்)புபுது கரன் மா(த்)தா
ப்ரதான வீர்ய வடவமின ரெகென யனு மென ஜய பூமி (க்)கரா
எ(க்)க மவ(க்)ககே தரு கெல பெவினா
யமு யமு வீ நொ(ப்)பமா
ப்ரேம வடா செம பேத துரெர தா நமோ நமோ மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சிறீ லங்கா தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நல்லெழில் பொலி சீரணி
நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா
ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்
நறுஞ்சோலை கொள் லங்கா
நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்
நமதுதி ஏல் தாயே
நம தலை நினதடி மேல் வைத்தோமே
நமதுயிரே தாயே-நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதாரருள் ஆனாய்
நவை தவிர் உணர்வானாய்
நமதேர் வலியானாய்
நவில் சுதந்திரம் ஆனாய்
நமதிளமையை நாட்டே
நகு மடி தனையோட்டே
அமைவுறும் அறிவுடனே
அடல் செறி துணிவருளே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
நமதார் ஒளி வளமே
நறிய மலர் என நிலவும் தாயே
யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த
எழில்கொள் சேய்கள் எனவே
இயலுறு பிளவுகள் தமை அறவே
இழிவென நீக்கிடுவோம்
ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி
நமோ நமோ தாயே - நம் சிறீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே
  • மாசி



    ஏழடி நடந்து வந்தே ஏந்துவர் ஏடுடையாரை
    ஆறடி கிடந்துவந்தே ஆற்றுவர் கருமந்தனை
    ஐந்தடி தள்ளி நின்றே அஞ்சுவர் ஆடவர்தாம்
    நாவடி நயந்த சொல்லில் நடுங்குவர் பகைவராவர்
    மூவடி உல களந்தே முகுந்தனும் வாமனனாய்
    ஈரடி தமிழால் உலகை ஈரத்தவன் வள்ளுவனார்
    ஓரடி பாதம் ஊன்றி ஓங்கார நடனம் செய்வான் 
    சீரடி போற்றுவோர்தம் அடியின்கீழ் பொடியேனே.
    - ஜோதி. 04/02/2016

    போதிமரம் தந்ததொரு போதனையால் 
    வேதிமதம் வெந்ததொரு வேதனையால்
    சாதிமதம் சரிந்ததொரு சாதனைதான்
    மீதிமனம் மாறாததொரு வேதனைதான். - ஜோதி. 05/02/2015


                                                  சிவனும் சீவனும் ஒன்றே ஆகும்.
                                                     சீவன் போகும் சிவனே ஆகும்.

    வாழ்க்கை என்னும் ஓடம் 
    வழங்குகின்ற பாடம் 
    மானிடனின் மனதினிலே
    மறக்கவொன்னா வேதம்.



    கவிப்பேரரசு வைரமுத்துவின் மீது ஒரு ஈழ தமிழன் குற்றம்சாட்டுகிறார் இது காலம் கடந்த செயல் என்று. 

    பாருங்கள் காணொளியை பகிருங்கள் — நன்றி
    அந்த ஈழத் தமிழன் நான் என்ற வகையில் இன்னுமொரு கவிதை போர். -ஜோதி.

    கவிப்பேரரசின் கவிதை வரிகளும்
    ஒரு ஈழத் தமிழனின் தார்மீக வலிகளும்
    ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

    முள்ளிவாய்க்கால் போயிருந்தேன் - அந்த
    முல்லைத்தீவையும் மோதிவந்தேன்.
    முள்ளில் கிழிந்த என் கண்களிலே - நீர் 
    முட்டித்தெறித்ததை யாரறிவார். (வை)

    முள்ளில் கிழிந்த உன் கண்களிலே - செங் 
    குருதி கூடவா வரவில்லை?
    முட்டித்தெறித்தது நீர் என்றால் - அதைப்
    பற்றிக் கவிதை படைத்தென்ன?

    ஆனந்தபுரத்தைக் கடக்கையிலே - என் 
    ஆவி துடித்ததை என்னசொல்ல.
    நானந்தத்துயரம் சொல்வதற்கு - என்
    நாபடும்பாடு கொஞ்சமல்ல. (வை)

    கோபாலபுரத்தில் கிடக்கையிலே - ஈழ
    ஆவி துடித்தது தெரியலையோ
    நீயந்தத்துயரம் சொல்வதற்கு - உன் 
    கைபெற்ற கூலி கொஞ்சமல்ல.

    இந்த இடம்தான் அந்த இடம் - எம்
    லட்சம் உயிர்களைக்கொன்ற இடம்.
    சொந்தம் சொல்லி நானழுதால் - விண்சுற்றும்
    கோள்கள் நின்றுவிடும். (வை)

    அந்த இடந்தான் நம்சொந்த இடம் - நம் 
    மண்ணின் மைந்தர் வீழ்ந்த இடம் 
    சொந்தம் சொல்லி நீயழுதால் - விண்சுற்றும்
    கோள்கள் சிரித்துவிடும்.

    சாகாத காற்றின் சத்தங்களில் - எம்
    சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்.
    ஆகாயம் எரித்த சாம்பல் துகள் - மண்ணில் 
    அங்கங்கலைவதைக் கண்டறிந்தேன். (வை)

    சாகாத காற்றின் சத்தங்களில் - நம் 
    சரித்திர எழுகுரல் கேட்டுலகம்
    ஆகாயம் எங்கும் எதிரொலிக்க - நந்திச்
    சமுத்திர அலைகளைக் கண்டறி நீ.

    எரிவாய் பட்ட சருகுகளாய் - உடல்
    இற்றுப்போனவர் எத்தனையோ.
    நரிவாய் பட்ட நண்டுகளாய் - இங்கு
    நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ. (வை)

    எரிவாய் பட்டும் சருகுகளாய் - மண்ணுக்கு
    எருவாய் போனவர் தான்
    நரிவாய் பட்ட நண்டுகளாய் - உன்மண்ணில்
    அகதியாய் அலைந்தவர் தான்.

    தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை - ஒரு
    தடயம் இன்றியே எரித்தாராம்.
    ஆயிரம் எலும்புக்கூடுகளைச் - சீன
    அமிலம் ஊற்றியே அழித்தாராம்.
    படர்ந்து கிடக்கும் வெறுமையிலே - இனம்
    பட்ட துயரம் சில அறிவோம். (வை)

    தாயிடம் பாலுண்ணும் பிள்ளைகளை - தமிழ் 
    நாட்டிலே பிச்சைக்கு அலையவைத்தார்
    ஆயிரம் கனவோடு வந்தவரை - அங்கு
    அகதிகள் முகாமிலே தங்கவைத்தார்
    அடிப்படை கல்வியில் முன்னேறி - அவர் 
    அடுத்தடி எடுப்பதைத் தடுத்து வைத்தார்.

    தோண்டுமிடத்தில் தங்கம் வரும் - என்று
    சொல்லிக்களித்த ஈழத்தில் 
    தோண்டும் இடத்தில் குருதிவரும் - என்று
    சொல்லிப்புலம்பும் நிலையுற்றோம். (வை)

    வேண்டும் இடத்தில் வேடம் இடும் - இந்த
    வேடிக்கை உமக்குப் புதியதில்லை
    தோண்டும் இடத்தில பணம் வருமேல் - உறவை
    தோண்டி எடுத்து கவிபாடு.

    மைதீட்டிச் செய்த நிறம்படைத்த - பல
    மங்கையர் கூந்தலில் பூவுமில்லை.
    கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே - சில
    கரங்களுமில்லைக் கை குலுக்க. (வை)

    மைதீட்டி நிறம் படைக்கும் கூந்தல் - நம் 
    மங்கையர் மறந்து நாளாச்சு
    கைநீட்டிப் பார்த்தாய் சில்லறைக்கு - சிலர் 
    கரண்சியுமில்லை கை குலுக்க.

    மண்ணில்விழுந்த மழைத்துளிகள் - அவை 
    மண்ணில் தொலைந்துபோவதில்லை.
    எண்ணிலடங்கா உயிர்த்தியாகம் - வெறும் 
    இறப்புக்கணக்கில் சேர்வதில்லை.
    அழிந்துபோனது போலிருக்கும் - ஆயின்
    அறுகம்புல்லுக்கு அழிவேது. (வை)

    இந்த வரிகள் வைரவரி உன் நெஞ்சில் 
    எழுந்த இரங்கல் வரி - வெறும் 
    ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு
    பாடவந்தவன் நீயல்ல - உன் 
    தமிழையும் புலமையும் உலகறியும் - அதை
    தலைவணங்காதவன் தமிழன் இல்லை.

    பொழியும் ஒருதுளி பட்டவுடன் - அது
    பொட்டென்று எழுமே அழியாது.
    எந்த யுகத்தில் போர்களில்லை - அட
    எந்த யுகத்தில் தோல்வியில்லை.
    அந்த யுகத்தை எருவாக்கு - நீ
    அடுத்த யுகத்தை உருவாக்கு! (வை)

    பொழியும் தமிழ்கவி பட்டவுடன் -அதில்
    பொட்டென்று எழுந்தது என் பாட்டு
    பொறுமும் எங்கள் மனக்குறையை
    போட்டு உடைத்தது புவிகாண - ஒரு
    தருமம் உண்டு நம் தவிப்பில் - சற்று 
    தனியே நின்று நீ யோசி. - ஜோதி.

    - வைரமுத்து

    வாழ்த்துகளும் வைபவங்களும் 01/02/2016இலிருந்து...


    அக்காச்சி அந்நாளில் உன்னோடு நாம் வாழ்ந்த 
    அக்காட்சி முடிந்தாலும் எம்மோடு நீ வாழ்ந்த 
    இக்காட்சி எந்நாளும் எம்மோடு தான் வாழும்
    ஐந்தாச்சு ஆண்டுகள் எம்மைவிட்டு நீ பிரிந்து.

    பிரிந்தன சேர்தலும் சேர்வன பிரிதலும் 
    புரிந்தனன் சோர்விலன் பிறப்பிலும் சார்விலன்
    அறிந்தென துள்ளம் என்றும் அருளொளி
    மதியெம் ஆகினன் ஆனந்தப் பேரொளியே!


    02/02/2016இல் 18வது திருமணநாளை
    கொண்டாடிய சுந்தரமோகன் - காயத்திரி
    தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
    ஜோதி, ரமணா, பெரியம்மா.



    இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
    அன்புடன் ஜோதி, ரமணா, பெரியம்மா.03/02/2016



    Shenthi's Bday party with Grand Children.






    Monday, 1 February 2016

    நான்றிந்த சின்னமாமி

    ஆலமரமொன்று அடிபெயர்ந்து வீழந்ததென்று
    செய்தி வந்ததின்று செய்வதொன்று நானறியேன் 
    வாழப் பிறந்தோரெல்லாம் சாவதே உண்மையிங்கு
    அந்த சாதலும் - நோதலும் எல்லாமே கங்கார்ப்பணம்.

    ஊருக்குள் புகழ் பரப்பி உறவுக்கு நிழல் பரப்பி
    பாருக்குப் பலவுணர்த்தி பயனோடு வாழ்ந்த மரம்
    நேருக்கு நேரெதையும் நறுக்காகக் கேட்டாலும் 
    யாருக்கும் மனம் நோகா நானறிந்த சின்னமாமி.

    காலத்தால் முதிர்ந்த மரம் ஞானத்தால் கனிந்த பழம் 
    கோலத்தால் ஞானப் பழம் கொள்கையில் லோகமயம்
    சீலத்தால் உயர்ந்த குணம் சிந்தையில் சிவமயமே
    ஞாலத்தில் நல்ல மனம் நானறிந்த சின்னமாமி.

    தந்தையோடு தாயிழந்து தமையனோடு வாழ்ந்திருந்து
    வந்தமண வாழ்விழந்து பெற்ற மகள் தானிழந்து
    உற்றதொரு சோதரியை உடன் பிறந்த சோதரனை
    பெற்ற மகன் தனையும் பேர்பெற்ற மருகனையும்

    இத்தரையில் போகவிட்டு சித்தம் தெளிவு பெற்றாய் 
    வித்தகங்கள் பேசிவீண் விவாதங்கள் செய்ததில்லை 
    சித்தரைப்போல் வாழந்திருந்தாய் சிவனையே நினைந்திருந்தாய்
    பத்தரைமாற்றுத் தங்கமவள் நானறிந்த சின்னமாமி.

    உண்மை பலவுணர்த்தி உவமானக் கதைகள் கூறி
    வெள்ளை மணங்காட்டி வேடிக்கையாய் சிரித்திடுவாய்
    சித்தர் பாடல்களும் சிவஞான போதனையும் 
    உத்தமியே உன்வாயக்குத் தித்திக்கும் தேன்பாகு.

    திருகோணமலை பெற்ற தெய்வீக பெருந் தாயே
    ஒருக்காலுமுன் திருக்கோலம் எம்சிந்தைவிட்டகலாது
    இக்காலமட்டுமல்ல எக்காலமும் எம் மனத்திலே
    பொற்காலமாக வாழ்வாள் நானறிந்த சின்னமாமி.

    சின்னமாமி என்றால் சிந்தைக்குள் சிங்கார பூ பூக்கும்
    எண்ணமெலாமினிக்கும் எம்மனமோ நிறைந்திருக்கும் 
    உம்மைப் பிரிந்தோமென்ற உணரவில்லை எமக்கிங்கு
    எந்தை - தாய் - குருவோடு நீயும் ஓர் தெயவமாமே!!!

    தோற்றம் : 23/01/1901.                  ஏற்றம் : 21/03/1992
    எனது தந்தையாரின் இளைய சகோதரியின் மறைவில் 
    என் மனதில் மலர்ந்த கவிதாஞ்சலி. அக்கால கட்டத்தில் 
    என் நாட்குறிப்பை "கங்கார்ப்பணம்" எனும் தலைப்பில் 
    எழுதி வந்தேன்.