Friday, 29 January 2016

நான் ஒரு கூட்டுப் புழுவாக இருந்த பொழுது




நான் ஒரு கூட்டுப்புழுவாக
இருந்த பொழுது,
என்னைத் தாண்டிப் பறந்து
சென்ற ஈசல்கள்
என்னைப் பரிகாசம் செய்தன.
நான் இறைவனை வேண்டினேன்.
அன்பு சேவை என அழகான
இரு சிறகுகளை இறைவன் 
எனக்குத் தந்தான்.
நான் பட்டாம்பூச்சி ஆனேன்.
வானில் பறந்து சென்ற போது
என்னைப் பார்த்து ஏளனம் செய்த 
ஈசல்கள் தங்கள் சிறகுகளை இழந்து
எறும்புகளாக ஊர்ந்து திரிந்தன. - ஜோதி

No comments:

Post a Comment